முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை – எச் ராஜா

Vinkmag ad

முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை – எச் ராஜா

சீறாப்புராணம் எழுதிய உமறுப் புலவர் உக்ரைன் நாட்டவர்

தமிழில் முதன் முதலில் “அசன்பே சரித்திரம்” என்ற நாவலை எழுதிய
சித்தி லெவ்வை மரைக்காயர்
சீனாக்காரர்

சதாவதானம் புரிந்த சதாவதானி செய்குத்தம்பி
பாவலர்
சோமாலியா நாட்டவர்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் பெரும் உறுப்பினராக இருந்து, “நான்காம் தமிழ்ச் சங்க நக்கீரர்” என்று சிறப்பிக்கப்பட்ட
குலாம் காதிர் நாவலர்
கொரியாக்காரர்.

இராமத்தேவராக இருந்து இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவி வைத்திய நூல் எழுதிய
யாக்கோபு சித்தர்
உகாண்டா நாட்டவர்.

நற்றமிழில் நான்கு காப்பியங்கள் எழுதிய காயல் சேகனாப்புலவர்
செர்பியா நாட்டவர்

முத்தமிழில் மூன்று இலக்கியங்கள் படைத்த வண்ணக் களஞ்சியப்
புலவர்
வெனிசுலா நாட்டவர்

மிஃராஜ் மாலை எழுதிய
ஆலிம் புலவர்
அமெரிக்காக்காரர்.

பெண் எழுத்தாளர்களின் முன்னோடி
நாகூர் சித்தி ஜுனைதா பேகம்
சுவீடன் நாட்டவர்

யூசுப்-ஜுலைகா காவியம் வரைந்த
சாரண பாஸ்கரணார்
சோவியத் யூனியனிலிருந்து வந்தவர்.

மசலா (புதிர்-வினா).
நாமா (வரலாற்றுக்கதை) ,
கிஸ்ஸா (கதை வடிவம்),
முனாஜாத்து (இறைவேட்கை பாடல்), படைப்போர் (போர் நிகழ்ச்சிகள்),
திருமண வாழ்த்து (திருமண பழக்க வழக்கங்களைக் கூறுவது) ,
நொண்டி நாடகம் (சிற்றிலக்கிய நாடக வகைகளில் ஒருவகை)

என்றெல்லாம் எழுதிக் குவித்து தமிழ் இலக்கியங்களுக்கு புதுப்பொலிவு ஏற்றிய இஸ்லாமியர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு சம்பந்தமில்லாத அயல் நாட்டவர்.

அப்படித்தானே
ஹரிஹர
ராஜா
ஷர்மா
அவர்களே…!

தமிழிலக்கிய வரலாறு உங்களிடமிருந்தும்,, கல்யாண் ராமனிடமிருந்தும், ,
ராம ரவிக்குமாரிடமிருந்துதான்
நாங்கள் கற்க வேண்டும் போல.

ஆக்கம்
நாகூர். கவிராயர்
அப்துல்கையூம் நானா
பஹ்ரைன்

News

Read Previous

காதலர் தின கவிதைகள்

Read Next

” அதிர்ஷ்டம் என்றால்”.

Leave a Reply

Your email address will not be published.