மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
முதுகுளத்தூர் ஒன்றிய அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் மூலம் நடைபெற்ற இப்பேரணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். நுகர்வோர் மாணவ மன்ற ஒருங்கிணைப்பாளர் மங்களநாதன், ஆசிரியர் சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி, பள்ளியில் தொடங்கி காந்தி சிலை, அரசு மருத்துவமனை வழியாக சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் செய்திருந்தார்.