மழை என்னும் மழலையின் சினம்

Vinkmag ad

மழை என்னும் மழலையின் சினம்

 

கடற்றாயின் கருவாகி

கருமுகில் சூலில் உருவாகி
இடியின் வலியுடன்
இறங்கிய மழையென்னும் மழலை
மீண்டும் கடற்றாய் மடிதேடி
அலைபாயும் வேளையில்
அதற்கென்று உருவான
அணைகளும், குளங்களும், ஏரிகளுமான
அழகியத் தொட்டில்கள்
அழிக்கப்பட்டதனால்
தூர்வாரல் என்னும்
தூய்மை நடைபெறாததால்
தானிருக்க வேண்டிய இடங்களைத்
தாரை வார்த்துக் கொடுத்த சினத்தினால்
தாரை தாரையாய்க் கண்ணீர் சிந்தியது
போரை விட உக்கிரமாய்த் தண்ணீரால்
போட்டுப் புரட்டி எடுத்தது!
-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

பருவநிலை மாற்றம்: இனியும் விழிக்காவிட்டால் விளைந்திடும் 15 பேராபத்துகள்!

Read Next

மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி

Leave a Reply

Your email address will not be published.