ஆசிரியர் கூட்டணி கிளை துவக்க விழா
முதுகுளத்தூர் ஏஎஸ் திருமண மஹாலில் சனிக்கிழமை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கிளை துவக்க விழா நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கிளையை அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை, மாநிலத் தலைவர் கோ.முருகேசன், மாநில பொதுச்செயலாளர் அ.வின்சென்ட் பால்ராஜ், மாநில துணைச் செயலாளர் அ.முனியாண்டி ஆகியோர் கிளையை துவக்கிவைத்துப் பேசினர்.
துவக்க விழாவுக்கு வட்டார தலைவர் கே.பசுபதி தலைமை தாங்கினார். வட்டாரச் செயலாளர் ஐ.சூசைராஜ் வரவேற்றார், மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் நா. சரவணன், பொருளாளர் எம்.சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் கே.பாண்டியன் நன்றி கூறினார்.