அம்மா திட்ட முகாம்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே கீழக்கன்னிசேரியில், அம்மா திட்ட முகாம், தாசில்தார் ரவீந்திரநாதன் தலைமையில் நடந்தது.
விளங்குளத்தூர் ஊராட்சி தலைவர் கனகவள்ளி முன்னிலை வகித்தார். முகாமில் 31 மனுக்கள் பெறபட்டு, 17 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லீலாவதி, மண்டல துணை தாசில்தார் இந்திரா, ஆர்.ஐ., பிரேமா, வி.ஏ.ஓ., திணேஷ்பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.