12 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்
முதுகுளத்தூர், : ராமநாதபுரம் மாவட்டத்தில் சா ராயம், மது விற்றதாக கைது செய்யப்பட்டவர்களின் மறுவாழ்விற்காக மதுவிலக்கு போலீசார் இலவச ஆடுகளை வழங்கினர்.
முதுகுளத்தூர் அருகே ஒருவானேந்தல் கிராமத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மதுவிலக்கு டிஎஸ்பி தங்க வேலு தலைமை வகித்தார். கடலாடி தாசில்தார் ரவி ராஜ், ஊராட்சி தலைவர் சத்தியமூர்த்தி, உதவி ஆணையர் சண்முகம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். 12 பேருக்கு தலா ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளாடுகள் இலவசமாக வழங் கப்பட்டன.
கோட்ட ஆய அலுவலர்கள் பவானி, கங்கா, வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன், விஜயலெட் சுமி, கிராம நிர்வாக அலு வலர் மணிகண்டன், ஊரா ட்சி துணை தலைவர் அசோதை சுப்பிரமணியன், கிராம உதவியாளர் ரவீந்தி ரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.