தம்பதியருக்கு அரிவாள் வெட்டு
முதுகுளத்தூர்: ஆணைசேரியை சேர்ந்த தம்பதி மாரியம்மாள், கதிரேசன். நேற்று, இவர்கள் முதுகுளத்தூரில் இருந்து சொந்த ஊருக்கு பைக்கில் திரும்பினர்.
செல்வநாயகபுரம் விலக்கு அருகே நல்லூரை சேர்ந்த கருப்பையா, ஆணைசேரியை சேர்ந்த சேதுராமு, ராஜேந்திரன் உட்பட ஐந்து பேர் அரிவாளால் வெட்டியதில், பலத்த காயமடைந்த இருவரும் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
மாரியம்மாள் புகார்படி, கருப்பையாவை, முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் ஜேசு கைது செய்தார். மற்றவர்களை தேடிவருகின்றனர்.