துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி

Vinkmag ad

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி

துபாய் :

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி முஸ்ரிப் பூங்காவில் 25.12.2022 ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் செய்யது சுல்த்தான் இபுராஹீம் தலைமை வகித்தார். முன்னதாக முஹம்மது இறைவசனங்களை ஓதினார். பொதுச் செயலாளர் முஹம்மது அஸ்லம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் மற்றும் பொருளாதாரத்துறை தலைவர் இளையான்குடி முனைவர் பி.என்.பி. முஹம்மது சஹாபுதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில் வெளிநாடுகளில் வசித்த போதிலும் சொந்த ஊருக்கு நலப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் சிறப்புக்குரியது. இந்த பணிகளில் சிறப்பாக மேற்கொண்டு வரும் நிர்வாகிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் டிஜிட்டல், போதைப் பொருள் உள்ளிட்டவை எதிர்கால தலைமுறையினருக்கு பெரும் சவால்களாக இருந்து வருகிறது. இதனை எதிர்கொள்ள தேவையான பணிகளை அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

அபுதாபி அமீனுதீன், ஜஹாங்கீர் அக்பர், முதுவை ஹிதாயத், இம்தாதுல்லா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

மாணவ, மாணவியருக்கு வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. பொருளாளர் முஹம்மது அனஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் சபியுல்லா, முஹம்மது கனி, இஸ்மத்துல்லா, உவைஸ், அப்துல் அஹத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்

Read Next

இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *