அமரர் ராஜீவ் காந்தி நினைவு நாள்
அமரர் ராஜீவ் காந்தி நினைவு நாள் அஞ்சலி -21.05.2020
தமிழக வரலாற்றில் , 1991 , மே .21,
தலை குனிவை ஏற்படுத்திய நாள் .
தாமரையின் பெயர் கொண்டவரை
தரணி போற்றிய தலைவனை
தனுசு என்னும் மனிதவெடிகுண்டு
தலை வேறு , கால் வேறாய்
தகர்த்தெறிந்த கருப்பு நாள் .
தேர்தல் பிரச்சாரத்திற்கு தேஜஸுடன் வந்தவரை
நேரு குடும்பத்து நேர்மையான வாரிசை ,
இந்திராவுக்குப்பின் வந்த இளைய பிரதமரை
இலங்கையில் அமைதியை நிலைநாட்ட
இந்திய அமைதிப்படையை அனுப்பியதால்
இன்னலுக்காளான விடுதலைப்புலிகள் -அவரது
இன்னுயிரைப் பறித்தனர் இந்திய மண்ணிலே.
திருப்பெரும்புதூர் வந்த தேசியத் தலைவரை
திரும்பிச் செல்லவிடாது , தீயவர் அழித்தனர் .
உடலின் பாகங்கள் , உருத்தெரியாமல் சிதற
உலுத்தர்கள் ஆடினர் உக்கிரதாண்டவம் .
அரசியல் எதிரியை ஒழிக்க ,மரணமடைந்தார் வழியிருந்தும்
அன்னையைக் கொன்றதுபோல் ,அவரையும் கொன்றனர்.
இனியாரும் இந்நாட்டில் காந்தியின் பெயர் வைக்காதீர் .
இயற்க்கை மரணம் வாய்க்காது அவர்களுக்கு.
காந்தி சுடப்பட்டார், இந்திரா காந்தி சுடப்பட்டார்,
சஞ்சய் காந்தி விபத்தில் அகால மரணமடைந்தார்
ராஜீவ் காந்திக்கோ வெடிகுண்டால் துர்மரணம் .
அவர் மட்டுமின்றி , அன்று அவரோடு பொதுமக்கள்
பதினேழுபேர்கூட பரலோகம் சென்றுவிட்டார் .
தேசத்தின் பிரதமரைக் கொன்றுகு வித்தவர்க்கு
தேசபக்தியில்லாத தீய சக்திகளெல்லாம்
நேசம் காட்டுவதும், நீதி மன்றம் செல்வதுவும் ,
நாசவேலை செய்தவர்க்கு ஆதரவளிப்பதுவும்
மோசமான செயல் என்று ,உணரும்நாள் எந்நாளோ ! .
பயங்கரவாதம் பாரில் வேரோடு அழியட்டும் .
அஹிம்சையும், அமைதியும், அகிலமெங்கும் ஆளட்டும்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்