அமரர் அப்துல் கலாம் அவர்களுக்கு நினைவாஞ்சலி
அமரர் அப்துல் கலாம் அவர்களுக்கு நினைவாஞ்சலி மேகாலயாவில் மாணவர் பல்கலைக்கழகந்தன்னில் மேன்மையடயச் செய்யும் மேதகு உரையாற்றிடவே மேடையில் ஏறி நின்ற மேதையின் இதயம் நின்று வேதனையளித்ததுவே , வெற்றிடம் தோன்றியதுவே .. அப்துல்கலாம் என்னும் அவதாரபுருஷனின் சப்தம் அடங்கியது,ஒரு சகாப்தம்முடிந்தது . அடக்கம் நிறைந்த ஒரு அற்புதமாமனிதர் அடக்கமானார்பிறந்த ராமேஸ்வரத்தில் ஆக்கபூர்வமாய்வாழ்ந்து அனைவரது இதயத்திலும் நீக்கமறநிறைந்தவருடல் பேக்கரும்பில் மீளாத தூக்கமதைத் தழுவியதே…