கொரோனா கண்டிப்பு
கொரோனா கண்டிப்பு
கண்ட இடத்தில் கையை வைக்கக் கூடாது…
வந்தவர் யாரேனும் கையை கொடுத்தல் ஆகாது…
அலுப்பில்லாமல் கை கழுவுதல் மேலாகும்..
பொறுப்பில்லாமல் ஊர் திரிவது தப்பாகும்…
வருமுன் காப்பது மிகவும் சிறந்த பண்பாகும்…
வந்தபின் அழுவது எந்த விதத்தில் நன்றாகும்…
மருத்துவர் சொல்லை கருத்தில் கொண்டு இருக்கனும்…
மருந்துகள் இல்லா வாழ்க்கையை வாழ நினைக்கனும்…
வெளியில் போகயில் முகமூடியை அணியனும்
நம்மை அழிக்க இருக்கும் கொடிய நோயை அழிக்கனும்
ஓயாது உழைக்கும் காவல் துறையை மதிக்கனும்
தூய்மை காக்கும் தொழிலாளர்களை துதிக்கனும்
-இஞ்சிக்குடி இபுராகிம்-