நம்முடைய வார்த்தைகள்
”நம்முடைய வார்த்தைகள்.’
…………………………………….
நாம் நல்லவராக இருந்தாலும் நம்முடைய பேச்சு நம்மைத் தீயவனாக சித்தரித்து விடுகிறது.
வார்த்தையை விட்டவர் ‘நான் ஒரு பேச்சிற்காகத் தான் சொன்னேன்’ என்று எவ்வளவு சமாளிப்புகளைக் கூறினாலும் மனதில் பதிந்த காயம் மறையாத வடுவாகப் பதிந்து விடுகிறது.
விளையாட்டு வார்த்தைகள் பல விபரீதங்களை விதைத்து விடுகின்றன. கடுமையான வார்த்தைகள் கலகத்தை உண்டு செய்கின்றன.
கனிவான வார்த்தைகள் கல் நெஞ்சம் கொண்டோரையும் கனிய வைத்து விடுகிறது.
ஒரு அரசருக்கு அவருடைய,எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ,ஒரு கனவு வந்தது.
காலையில் பீதியுடன் எழுந்த அரசர்,அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று,பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தார்.
அந்த நாடி ஜோதிடர், தனது ஓலைச்சுவடியை எடுத்து,அதில் பொக்கை வாய் கனவு” , பற்றி விளக்கி இருந்த,ஒரு ஓலையை வாசித்துவிட்டு,
“அரசே !
உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் , உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள் என்று சொன்னார்.
அந்த அரசர் மிகவும் கோபமுற்று,”இவரைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!”*என்று உத்தரவிட்டார்.
அதன் பிறகும் மன்னரின் மனம் சமாதானம் அடையவில்லை..இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து,அவரிடம் ,தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன? என்று வினவினார்.
அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச் சுவடியைத்தான் வைத்தி ருந்தார். அவரும் அதைப் படித்து விட்டு,
மன்னா…! உங்கள் சொந்த, பந்தங்களை எல்லாம் விட,நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள்”என்று கூறினார்.
இதனால் மனம் குளிர்ந்த அரசர்,
அந்த *ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தார். இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள்…அதே செய்தியைத்தான் சொன்னார்கள்.
ஒருவர் எல்லோரும் இறந்து விடுவார்கள் என்றார்…
இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார்.. அவ்வளவு தான் வித்தியாசம்…
ஆம்.,நண்பர்களே..,
பேசும் வார்த்தைகளை கவனமுடன் உபயோகித்தால் ,
வாழ்க்கையை வெற்றி கொள்ளலாம்.”..
நாம் பேசும் வார்த்தைகள், மற்றவரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமே,தவிர ,எந்தவித மனகசப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்…..