குறளினில் பலவுரைத்தான்!
ஈரடியால் இருள் களைந்தான்! வாழ்வியல் நெறிகளை வண்தமி ழாக்கியெம் வாழ்வை உயர்த்தவந்தான்! – வையத் தாழ்வை அகற்றவந்தான்! நீள்கவி ஏதுமில் லாதுஈர் அடிகளில் நிறைவுறு பொருளுரைத்தான்! – திருக் குறளினில் பலவுரைத்தான்! அகத்தழுக் கிலையெனில் அதுஅனைத் தறம்என அரியதோர் கருத்துரைத்தான்! – அறம் பெரிதென எடுத்துரைத்தான்! இகத்தெழு …