கவியரசர் கண்ணதாசன் 94-வது பிறந்த நாள் விழா
தமிழ் வளர்ச்சி மன்றம் ஆஸ்திரேலியா வழங்கும் கவியரசர் கண்ணதாசன் 94th பிறந்த நாள் விழா நிகழ்ச்சி https://youtu.be/YyMqd_I6QTg
தமிழ் வளர்ச்சி மன்றம் ஆஸ்திரேலியா வழங்கும் கவியரசர் கண்ணதாசன் 94th பிறந்த நாள் விழா நிகழ்ச்சி https://youtu.be/YyMqd_I6QTg
சிறுகூடல் பட்டி சிறந்தது உன் பிறப்பால்…. காகங்களும் கரையத் தயங்கிய வானத்தில் மேகத்தின் கரம்பிடித்து பறந்திடக் கற்றவன்…. மாமிசக் கூடங்களில் மலர்களை விற்றவன் மார்கழிக் குளிரிலும் தீப்பொறி செய்தவன்….. வாயசைத்த ஊமைகளுக்கு வாழ்வளித்த உன் வரிகள் வாழ்கிறது நீ செத்த பின்னும்…….. அதனால்தான் சொன்னாய்… “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை..…
கவியரசர் கவிதை….. அன்னை இந்திரா மறைந்த நாள் 30.10…..……….1984 ஏற்றுங்கள்; போற்றுங்கள்! திங்களோர் முறைதான் பூக்கும் சித்திர வடிவம் காட்டும் செங்கழு நீர்ப்பூப் போல தேயமோர் திருநாள் காண(த்) தங்களை ஈந்தார்; அந்தத் தலைவரை எண்ணும் நாளே மங்கலத் திருநாள்; இன்று வணங்குவோம் அவரை வாழ்த்த. வெடித்தது கருவி; ஆங்கே வீழ்ந்தது குருதி; மண்ணில் துடித்தது ஆவி; ஆயின் தொட்டகை விட்டா ரில்லை பிடித்ததோர் கொடியை மார்பில் பிணைத்தவர் மறைந்தார்; அந்த படித்தளத் தின்மேல் தானே பறக்கின்ற …