மின்சாரமில்லா இரவுகள்
இரவின் வெற்றிடச் சாலையில் ஒருவருமில்லை காற்றும் தன் இறக்கைகளை சுருக்கி துயிலுற சென்றது போலும் வியர்வையில் அலங்கரித்து அழகியல் படிக்கிறது உடல் நிசப்த இரவில் சில்வண்டு இசைமீட்டி எரிச்சலூட்டுகிறது கொசு கொஞ்சி ரீங்கரித்து முத்தமிட்டு வலியூட்டுகிறது மின்சாரமின்மையின் நெருடல்கள் இரவில் தான் நாட்டியம் புரிகிறது டடக் டடக் டடக்…