துபாயில் அறிவியல் அறிஞருக்கு பாராட்டு
துபாய் : துபாயில் அறிவியல் அறிஞரும், தோஷிபா எலிவேட்டர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான
அல்ஹாஜ் எம்.ஜே. முஹம்மது இக்பால், சமூக ஆர்வலரும், தொழில் அதிபருமான கல்லிடைக்குறிச்சி முஹம்மது
முஹைதீன் அவர்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
அப்போது பேசிய முஹம்மது முஹைதீன், தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் இருந்து வந்து இன்று உயர் நிலையை அடைந்துள்ளவர்
எம்.ஜே. முஹம்மது இக்பால். தனது அறிவியல் கருத்துக்கள் மூலம் இளைஞர்களை வசப்படுத்திக் கொண்டுள்ளார்.
லிப்ட் துறையில் தனது சிறப்பான தொழில்நுட்ப ஆற்றலால் முக்கிய பங்காற்றி வருபவர் என தெரிவித்தார்.
அவரின் சமூகப் பணிகள் இன்னும் சிறந்தோங்க வாழ்த்துவதாக குறிப்பிட்டார்.