உதவி
ஷார்ஜா மாநகராட்சியில் பணி செய்து வரும் மதுக்கூர் அக்பர்
இன்று வெள்ளிக்கிழமை மதியம் தொலைபேசியில் அழைத்தார்.
தனது வீட்டின் அருகே வசித்து வரும் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த
சகோதரி ஒருவரின் தந்தை மதுரையில் இறந்து விட்டதாகவும், இன்று ராசல் கைமாவில் செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்க உதவிட கேட்டுக் கொண்டார்.
இந்த விமானத்துக்கான ஏற்பாடு செய்து வரும் துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷை உடனடியாக தொடர்பு கொள்ளப்பட்டது. அவர் அந்த பெண் தேவையான ஏற்பாடுகளை செய்து ராசல் கைமா சர்வதேச விமானத்தில் இருந்து பத்திரமாக வழியனுப்பி வைத்தார்.
மிகவும் குறுகிய நேரமாக இருந்தாலும் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஜெயந்தி மாலா சுரேஷ் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags: உதவி