குடியரசு தின வாழ்த்துக்கள்
குடியரசு தின வாழ்த்துக்கள் அந்நியராட்சி முடிந்து , நம்மவராட்சி மலர்ந்து கண்ணியமிக்க குடியரசு உருவான நாளிது .
எழுபத்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம் எழுச்சி பெற்ற பாரதமென எண்ணிக் களிக்கின்றோம் .அடிமைத்தளை அறுக்க ஆருயிர் நீத்தோரின் அருமை ,பெருமைகளை அனைவரும் நினைப்போம் லட்சக் கணக்கானோர் தியாகங்கள் பலபுரிந்து லட்சியமொன்றே கொண்டு பெற்றோம் சுதந்திரம். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பதற்கு உற்ற வழியினிலே உற்சாகமாய் உழைப்போம் பார் போற்றும் பாரதத்தின் பாரம்பரியம் காப்போம். வேர்போன்ற நம் நாட்டின் கலாச்சாரம் காப்போம். பாரில் மிகப்பெரிய ஜனநாயக மென்னும் பேர் காப்போம் , இதன் பெருமை காப்போம்.
அண்டை நாடுகளையும் அரவணைத்துச் செல்வோம் சண்டை என்று வந்தாலோ சாகசத்தால் வெல்வோம். வேற்றுமையில் ஒற்றுமையைப் பேணுவது பெருமையாம் . போற்றி இதைப் பாதுகாத்தல் அனைவருககும் கடமையாம்.
தேசியக்கொடியேற்றி வணங்குதல் மட்டுமின்றி தேச நலனுக்கு உழைத்தல் தான் நமது தேசத்தை முன்னேற்றும் என்பதனை உணர்ந்து தேசப்பற்றோடு தினந்தோறும் வாழ்வோம். 99666666
என் தேசம் என் உடைமை , என் தேசம் என் உரிமை . என் தேசம் என் பெருமை , இதைக் காப்பதென் கடமை .
வந்தே மாதரம் ! வாழ்க பாரதம் .
அன்புடன் சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
26.01.2022