முதுகுளத்தூர் பகுதியில் எம்.ஜி.ஆர். நினைவு தினம்
முதுகுளத்தூர், சாயல்குடி, கடலாடி, கமுதி ஆகிய இடங்களில் வியாழக்கிழமை அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
முதுகுளத்தூரில் காந்தி சிலை,பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அதிமுக ஒன்றியச் செயலர் ஆர்.கருப்பசாமி தலைமை வகித்தார். ஜெயலலிதா பேரவை மாவட்டப் பொருளாளர் மலைக்கண்ணன், மாவட்ட கவுன்சிலர் கே.கர்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சாயல்குடி,சிக்கல்,மாரியூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவர் வீ.மூக்கையா தலைமை வகித்தார்.
கடலாடி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலர் என்.கே.முனியசாமிபாண்டியன் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர்கள் இளஞ்செம்பூர் மயிலேறிவேலன், எஸ்.பி.கோட்டை சுந்தரராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கமுதி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவர் டி.பாலு தலைமை வகித்தார். அபிராமம் பேரூராட்சித் தலைவர் குமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்