இருசக்கர வாகனம் திருட்டு
விருதுநகர் மாவட்டம் கல்லூரணியைச் சேர்ந்த சீனிராஜ் மகன் திருப்பதி. முதுகுளத்தூர் அருகில் உள்ள மேலப்பண்ணைக்குளம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.
இவர் கடந்த 21-ஆம் தேதி காந்தி சிலை முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கருவூலக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணாமல் போய்விட்டது. இது குறித்து திருப்பதி வெள்ளிக்கிழமை முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் தங்கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.