சர்வ தேச மகளிர் தினம்
சர்வ தேச மகளிர் தினம்
தாயாய் , தாரமாய் ,
தமக்கையாய் , தாதியாய்
மகளாய் , மன்னியாய்
மாமியாராய் , மருமகளாய்
தோழியாய் , துணைவியாய்
பாசமிகு பாட்டியாய்
தசாவதாரம் எடுப்பது மகளிரன்றோ
பசி தீர்க்கும் அன்னமாய்
நோய் தீர்க்கும் மருந்தாய்
பொறுமையில் பூமியாய்
உறவிணைக்கும் பாலமாய்
வழிகாட்டும் குருவாய்
வரமளிக்கும் தெய்வமாய்
அஷ்டாவதானம் செய்வதும் மகளிரன்றோ
கலங்கிடும் மனதிற்கு
கலங்கரை விளக்கமாய்
விளங்கி கரை சேர்ப்பவர் மகளிரன்றோ
குத்து விளக்கேற்றி
குடும்பமே கோயிலாய்
விளங்கிடச் செய்வது மகளிரன்றோ
செவிலியர் போலவே
சேவைகள் செய்வதில்
சிறந்து விளங்குவோர் மகளிரன்றோ
பெண்கல்வி எதிர்க்கும் துன்மதியாளரை
பெண்களை போகப்பொருளாய் நினைப்போரை
பெண்களை அடிமையென பேசித் திரிவோரை
பெண்களால் முடியாதென பிதற்றித் திரிவோரை
பெண்களி டம் வரதட்சினை கேட்போரை
பெண்களை எள்ளி நகையாடிடும் பேடிகளை
நன்முறை அல்லது வன்முறை கொண்டு
வரன்முறைப் படுத்திட சூளுரைப்போம் .
உரி மைகள் கொடுப்போம்
மரியாதை கொடுப்போம்
உயர்ந்த இடமொன்று
உள்ளத்தில் கொடுப்போம்
உலக மகளிர்தின உறுதிமொழி எடுப்போம்
வாழ்க மகளிர் ! வாளர்க மகளிர் புகழ் !!
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
8.03.2015