இராமேஸ்வரம் எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகள் உதவி காவல் கண்காணிப்பாளர் உடன் சந்திப்பு

இராமேஸ்வரம் எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகள் உதவி காவல் கண்காணிப்பாளர் உடன் சந்திப்பு

இராமேஸ்வரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி கண்காணிப்பாளர் மீரா ,IPS அவர்களை மரியாதை நிமித்தமாக எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர்.மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்
இதில் தீவு பகுதியில் நடைபெறும் விபத்துகள் குறித்தும், பாம்பனில் உள்ள மதுபான கடை அகற்றுவது குறித்தும், வேதாளை பகுதியிலுள்ள மக்களுக்கு பின்கோடு பிரச்சனையால் மூன்று முறைக்கு மேல் போலீஸ் விசாரணை குறித்தும், மண்டபத்தில் போதை கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் உட்பட கோரிக்கைகள் வைக்கப்பட்டது
இந்த சந்திப்பின்போது, SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் முகமது சுலைமான், மீனவர் அணி மாவட்ட செயலாளர் அபுலா, மண்டபம் ஒன்றிய தலைவர் பௌசூல் அமீன், மண்டபம் ஒன்றிய செயலாளர் அஜ்மல் கான், இராமேஸ்வரம் நகர செயலாளர் அப்ரிடி, மண்டபம் நிர்வாகி சல்மான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.




