3 மாதமாக ஓய்வூதியம் “கட்’ மாற்றுத்திறனாளிகள் தவிப்பு
முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் மூன்று மாதங்களாக ஓய்வூதியம் வழங்காததால், மாற்றுத்திறனாளிகள் தவிப்பில் உள்ளனர். இவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஓய்வூதியம் கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லை.
முதுகுளத்தூர் மாற்றுத்திறனாளி நாககுமாரன்: பெற்றோர் இல்லாத நிலையில், தாலுகா அலுவலகம் முன் மனுக்களை எழுதி கொடுத்து அதன்மூலம் வரும் பணம், அரசு வழங்கும் ஓய்வூதியத்தில், எனது தங்கையின் படிப்பு மற்றும் குடும்பத்தை நடத்தி வருகிறேன்.
மூன்று மாதங்களாக ஓய்வூதியம் வழங்காததால் சாப்பாட்டுக்கே சிரமமாக இருக்கிறது, என்றார்.வருவாய்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “”நிதி வரவில்லை. வந்தவுடன் பட்டுவாடா செய்யப்படும்”, என்றார்.