ஸ்ரீ வரகதப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
முதுகுளத்தூர் அருகே மாரந்தை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வரகதப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மாரந்தை கிராமத்தில் வீற்றிருக்கும், ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவரகதப்பெருமாள், ஆதிலெட்சுமி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் ஆகிய திருக்கோயில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள், அன்னதானம், விளக்குபூஜை, ஆடல்பாடல் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் ராமநாதபுரம் தேவஸ்தான திவான் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாரந்தை ஊராட்சி மன்றத் தலைவர் மங்களேஸ்வரி நீதிதேவன் முன்னிலை வகித்தார்.
விழா ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழாக் குழுவினர் மற்றும் கிராமப் பொதுமக்களும் செய்திருந்தனர்.
மாரந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தோர் கும்பாபிஷேக விழாவில் திரளாக கலந்து கொண்டனர்.