வட்டார கால்பந்து, இறகு பந்து போட்டிகள்

Vinkmag ad

முதுகுளத்தூரில் வட்டார அளவில் பெண்களுக்கான கோ-கோ, மற்றும் ஆண்களுக்கான கால்பந்து, இறகு பந்து போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

முதுகுளத்தூர் டி.இ.எல்.சி உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் வட்டார அளவில் பெண்களுக்கான கோ-கோ விளையாட்டுப் போட்டியை பள்ளித்தலைமை ஆசிரியை பிரிட்டோ செல்வக்குமாரி தொடங்கி வைத்தார். போட்டியின் போது 14,17,19 வயதிற்கு உள்பட்ட மாணவிகளுக்கிடையேயான போட்டியில் சாயல்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர்.

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வட்டார அளவிலான கால்பந்து போட்டியை உதவி தலைமை ஆசிரியர் சண்முகவேல் தொடங்கி வைத்தார். 17 வயதிற்கு உள்பட்ட மாணவர்களுக்கிடையேயான போட்டியில் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல்பரிசு பெற்றனர்.

ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுக்கான இறகு பந்து போட்டியை பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஓ.ஏ.முகம்மது சுலைமான் தொடங்கி வைத்தார். 19 வயதிற்கு உள்பட்ட மாணவர்களுக்கிடையே நடைபெற்ற ஒற்றையர் இறகு பந்து போட்டியில் ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல்பரிசு பெற்றனர்.

இரட்டையர் பிரிவு போட்டியில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர்.

News

Read Previous

ஹைர உம்மத் காலாண்டு இதழ்கள்

Read Next

ராமநாதபுரத்தில் செப்.19 முதல் 28 வரை புத்தகத் திருவிழா

Leave a Reply

Your email address will not be published.