மேலச்சிறுபோதில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோதில், எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா, கூட்டுறவு சங்க தலைவர் முகம்மது ரபீக் தலைமையிலும், கடலாடி ஒன்றிய தலைவர் மூக்கையா முன்னிலையிலும் நடந்தது.
கடலாடி அ.தி.மு.க., நகர செயலாளர் வேலுச்சாமி, முன்னாள் இளைஞரணி செயலாளர் முத்துராமலிங்கம் பங்கேற்றனர்.ஒன்றிய இளைஞரணி இணை செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
முதுகுளத்தூர் ஒன்றியதலைவர் சுதந்திராகாந்தி, மாவட்ட வக்கீல்கள் சங்க இணை செயலாளர் கோவிந்தராமு, மாணவரணி துணை தலைவர் அழகுமுத்து அரியப்பன், நகர விவசாய அணி செயலாளர் கூரிச்செல்வம், நகர இளைஞரணி செயலாளர் ராஜமாணிக்கம், பூக்குளம் பழனிவேல், ஊராட்சி தலைவர்கள் சங்கரவேல் (கீழக்காஞ்சிரங்குளம்) பங்கேற்றனர்.
திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் முனியாண்டி தலைமையில், ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி, துணை தலைவர் ஆலங்குளம் குருசாமி முன்னிலையில் தினைக்குளத்தில் நடந்தது.
ஒன்றிய அ.தி.மு.க., துணை செயலாளர் செல்வக்குமார், அவை தலைவர் ராதா கிருஷ்ணன், மாவட்ட பஞ்., கவுன்சிலர்கள் ராஜேந்திரன், சரஸ்வதி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை தலைவர் பழனிக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பையா, களஞ்சியராணி.
ஊராட்சி தலைவர்கள் நாகராஜன் (உத்தரகோசமங்கை), கிருஷ்ணன் (கொம்பூதி), சுந்தரராஜன்(மாயாகுளம்), ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் பாக்கியநாதன் (புல்லந்தை), உடையத்தேவன்(ஆண்டித்தேவன் வலசை) பழனிமுருகன் (உத்தரகோசமங்கை), சண்முகம்(திருப்புல்லாணி), அ.தி.மு.க., கிளை செயலாளர் கே.எம்.ராஜூ பங்கேற்றனர்.