மூக்கில் கயிற்றைக் கட்டி 5 ஆட்டோக்களை இழுத்து சாதனை
முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை மூக்கில் கயிற்றைக்கட்டி 5 ஆட்டோக்களை இழுத்து இளைஞர் சாதனை படைத்தார்.
முதுகுளத்தூர் பெரியார் நகரைச்சேர்ந்தவர் ஏ.கே.அனல் அண்ணாத்துரை. இவர் முதுகுளத்தூர் பேருந்துநிலையம் முன்பாக தனது மூக்கில் கயிற்றைக்கட்டி அதன்மூலம் 5 ஆட்டோக்களை இழுத்து சாதனை படைத்தார். சாதனை நிகழ்ச்சிக்கு அமைச்சர் எஸ்.சுந்தராஜன் முன்னிலையில் வகித்தார்.
இதில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன், ஒன்றியச் செயலர் ஆர்.தர்மர், விவசாய அணி இணைச் செயலர் வி.கருப்பசாமி, மறவர் சங்கத் தலைவர் ராமசாமி, வழக்குரைஞர் பிரிவு இணைச்செயலர் அரி அழகப்பன் உள்ளிட்டோர் இளைஞரின் சாதனையைப் பாராட்டினர்.