புதிதாக மின் மாற்றிகள் அமைக்கக் கோரிக்கை
முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த முக்கிய ஊர்களில் புதிதாக மின் மாற்றிகள் அமைக்க வேண்டும் என்று தமிழக மின் வாரியத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதனிடம் மு.முருகன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து முருகன் எம்எல்ஏ மேலும் கூறியதாவது: முதுகுளத்தூர் உதவிக்கோட்ட மின் வாரியத்தை 2 ஆகப்பிரித்து, திருவரங்கம் உதவிக்கோட்ட மின் வாரியம் துவக்க வேண்டும் என்றும் முதுகுளத்தூருக்கு வடக்கே முக்கிய கிராமங்களில் புதிதாக மின் மாற்றிகள் அமைக்க வேண்டும் என்றும் அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.
முதுகுளத்தூர் தொகுதியில் ஏற்கனவே கீழத்தூவல், சாம்பகுளம் ஆகிய ஊர்களில் இந்த ஆண்டு புதிதாக மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுவிட்டன.
மகிண்டியில் புதிய மின் மாற்றி அமைக்க பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருவரங்கம் உதவிக்கோட்ட மின் வாரியம் தற்போது துவக்க சாத்தியமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தாக முருகன் எம்எல்ஏ கூறினார்.