முதுகுளத்தூர் பேரூராட்சிக் கூட்டம்

Vinkmag ad

முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்றது.

  கூட்டத்தில், பேரூராட்சித் தலைவர் ஆர். சசிவர்ணம் ராமர் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஆர். இளவரசி, துணைத் தலைவர் ஏ. பாசில் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இதில், காவிரி கூட்டுக் குடிநீர் முதுகுளத்தூரில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சரியாக விநியோகிப்பதில்லை. எனவே, இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி மூலம் வாங்கக்கூடிய பைப்புகள், மின்விளக்குகள் தரமாக இல்லாமல் மிகக் குறுகிய நாள்களிலேயே பழுதடைந்து விடுகின்றன. எனவே, அதிகாரிகள் தரமான பொருள்களை வாங்கி பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். இதற்கு, பேரூராட்சித் தலைவர், செயல் அலுவலர் ஆகியோர் பதிலளித்தனர்.

News

Read Previous

அபுதாபியில் வீடு வாடகைக்கு…..

Read Next

தமிழ்த்தாய் வாழ்த்து

Leave a Reply

Your email address will not be published.