முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் மழைநீர்

Vinkmag ad

முதுகுளத்தூர் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் விவசாயப் பணிகள் துவங்கியுள்ளன.

முதுகுளத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இரு நாள்களாக பலல்-இரவில் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளன. இதனால் வாகன ஓட்டுநர்கள் சிரமம் அடைகின்றனர். தொடர்ந்து மழை பெய்ததில் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் கண்மாய் போல் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பயணிகள் சிரமப்படுகின்றனர். உடனடியாக மழை நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் மழையால் முதுகுளத்தூர் பகுதி முழுவதும் ஒருநாள் மின் தடை ஏற்பட்டது. மழையால் தீபாவளி வியாபாரம் பாதிப்பு அடைந்தாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

News

Read Previous

எல் பி ஜி சிலிண்டர் காஸ் வாங்குபவர்களுக்கு வாழ் நாள் காப்பீடு

Read Next

முதுகுளத்தூர் வட்டாரத்தில் மழை நீடிப்பு விவசாய வேலைகள் மும்முரம்

Leave a Reply

Your email address will not be published.