முதுகுளத்தூர் சுப்பிரமணியர் கோயிலில் அன்னதான திட்டம் தொடக்கம்
முதுகுளத்தூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கியது.
ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியமான ஸ்ரீ சுப்பிரமணியர் கோயிலில் தமிழக முதல்வரின் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு இந்து சமய அர நிலையத்துறை இயக்குநர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி திட்டத்தினை தொடக்கி வைத்தார். தேவஸ்தான திவான் மகேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி, கவுன்சிலர் உடை.எம்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக பொறுப்பாளர் வழக்குரைஞர் கோவிந்தசாமி, அண்ணா தொழிற்சங்க தலைவர் சேதுபதி, பாசறை செயலாளர் மாரி, விவசாய அணி இணைச் செயலாளர் வீ.கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.