முதுகுளத்தூர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா
முதுகுளத்தூர் சோனை மீனாள் மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரியின் முதல்வர் தமிழ்மாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மூன்றாம் ஆண்டு மாணவி கவிதாராணி வரவேற்றார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்று முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணினி பயன்பாட்டுத்துறை மாணவி நவரத்தினம் செய்திருந்தார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.