முதுகுளத்தூர் – கடலாடி விலக்கு ரோட்டில் சிக்னல் அமைக்கப்படுமா ?
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர்- கடலாடி விலக்கு ரோடு, குறுகலாக இருப்பதால் விபத்துகள் அதிகரித்துள்ளது. இதை தவிர்க்க, போக்குவரத்து “சிக்னல்’ அமைக்க வேண்டும்.
முதுகுளத்தூர் அருகே மேல, கீழச்சாக்குளம், கடம்பங்குளம், மேலமானாங்கரை, ஏனாதி, கண்டிலான், கிடாத்திருக்கை, ஒருவானேந்தல், கடலாடி, ஏ.புனவாசல், ஆப்பனூர், இளஞ்செம்பூர், பூக்குளம் உட்பட 200 க்கும் மேற்பட்ட கிராமங்களையும், முதுகுளத்தூரையும் இணைக்கும் விதமாக, கடலாடி விலக்கு ரோடு உள்ளது.
நான்கு சக்கர வாகனங்கள் வந்தால்கூட, டூவீலர்கள் செல்வதில் சிக்கலாக இருக்கிறது. கடலாடி விலக்கு ரோடு, பேரூராட்சி கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கமுதி, முதுகுளத்தூரில் இருந்து வரும் வாகனங்கள், கடலாடி விலக்கு ரோட்டில் வரும் வாகனங்களுக்கு தெரியாததால், விபத்துகள் ஏற்படுகிறது. பலர் பலியாகி உள்ளனர். இதை தவிர்க்க கடலாடி விலக்கு ரோட்டில், “சிக்னல்’ அமைத்து, போக்குவரத்து போலீசாரை நியமிக்கவேண்டும்.