முதுகுளத்தூர் அருகே விபத்தில் இளைஞர் சாவு

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் இறந்தார்.

  முதுகுளத்தூர் அருகே கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் கணேஷ்பாபு (20). இவர், தனது ஊருக்கு நடந்து சென்றபோது அதே ஊரைச் சேர்ந்த வெள்ளி மகன் ஆரலிங்கம் (31) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக கணேஷ்பாபு மீது மோதியது. இதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

இவர்களை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே கணேஷ்பாபு இறந்தார். இதுகுறித்து கடலாடி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News

Read Previous

திடல் ஜமால் வஃபாத்து

Read Next

முதுகுளத்தூரில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல்: பரவாமல் தடுக்க கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published.