முதுகுளத்தூர் அதிமுக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு
முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மீது சனிக்கிழமை தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கமுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முதுகுளத்தூர் சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகா முனியசாமி தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கன்னிராஜபுரம், கமுதி, பசும்பொன் ஆகிய இடங்களில் உள்ள தேவர், சுந்தரலிங்கம், காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் கமுதி பேருந்து நிலையம் அருகே தனது ஆதரவாளர்களுடன் வாகனங்களில் வந்து அவர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அவர் தேர்தல் விதிமுறைகளை மீறி 26 வாகனங்களுடன் வந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் அதிகாரியும், பரமக்குடி வேளாண்மை உதவி பொறியாளருமான பார்த்தசாரதி, கமுதி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் முருகன் வழக்குப் பதிவு செய்தார்.