முதுகுளத்தூரில் மழை வேண்டி கஞ்சிக் கலய ஊர்வலம்
முதுகுளத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, பக்தர்கள் மழை வேண்டி கஞ்சிக்கலயம் எடுத்துச்சென்றனர்.
முதுகுளத்தூர் சங்கரபாண்டி ஊருணிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபராசக்தி ஆலயத்தில் இருந்து, எஸ்.ராமமூர்த்தி தலைமையில் சுப்பிரமணியர் ஆலயம் வழியாக விநாயகர் கோயில், அய்யனார் கோயில் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் 300 பேர் கஞ்சிக்கலயங்களுடன் ஊர்வலமாகச் சென்றனர். நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி கோயில் நிர்வாகிகள் ஏ.மீனாள், எஸ்.ஆர்.முத்துக்காளி, எஸ்.ஆர்.எஸ்.பரமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.