முதுகுளத்தூரில் பா.ஜ.க. பிரசாரம்

Vinkmag ad

முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க. வேட்பாளர் பிரசாரம் செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் பிரசாரம் செய்து பா.ஜ.க. வேட்பாளர் குப்புராமு பேசியபோது, ராமநாதபுரம், சேதுபதிகள் ஆட்சிக் காலத்தில் தான் நீர் மேலாண்மையை சரியாக மக்கள் பயன்படுவதற்கு 300 பாசறை கண்மாய்களை ஏற்படுத்தப்பட்டன.

144 தடை உத்தரவு என்பது ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் தான் உள்ளது. குஜராத்தில் சட்டம்- ஒழுங்கு சீராக உள்ளதால் விவசாயம், தொழில் துறை, மருத்துவம் போன்ற துறைகள் நல்ல முன்னேற்றம் அடைந்து விட்டன. கிராமங்களில் நடைபெறும் மகத்தான திட்டமான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாள்களாக மாற்றி, 100 ரூபாய்க்கு பதிலாக 300 ரூபாயாக உயர்த்துவோம். தட்டுப்பாடே இல்லாத மின்சாரத்தை கொண்டு வருவோம். எதிர்கால இந்தியாவை நம் அனைவரும் சேர்ந்து வளமானதாக உருவாக்குவோம் என பேசினார்,பிரசாரத்தின் போது தேமுதிக மாவட்டச் செயலர் ஜின்னா, மாநில துணைத் தலைவர் சுப. நாகராஜன், மாநில இளைஞரணி துணைத் தலைவர் பாலகணபதி, சிறைக்குளம் ஊராட்சித் தலைவர் ரமேஷ்பாபு, பா.ஜ.க. மாவட்டச் செயலர் தங்கராஜ், ஒன்றிய செயலர் சந்திரசேகர், மாவட்டச் செயலர் ராஜா, சட்ட மன்ற தேர்தல் பொறுப்பாளர் எம். மதுரைவீரன், ஒன்றியச் செயலர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

வள்ளல் கா.நமச்சிவாயர்

Read Next

முதுகுளத்தூர், கடலாடி, பகுதியில் மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை: டி.எஸ்.பி. எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *