முதுகுளத்தூரில் கால்நடை பராமரிப்பு முகாம்
முதுகுளத்தூரில் சனிக்கிழமை ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் விவசாயிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கால்நடைகளை பராமரிப்பது பற்றிய ஆலோசனை முகாம் நடைபெற்றது.
முதுகுளத்தூர் எம்.ஜி.வி. காம்ப்ளக்ஸில் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, பரமக்குடி வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்பேற்பு நிகழ்ச்சியில், ஆடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஆலோசனைகளை கால்நடை மருத்துவர் பி.சந்தானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கால்நடைகளுக்கான தீவன முறைகள், ஆடுகளை தேர்வு செய்யும் முறை, இருப்பிட பராமரிப்பு, இனவிருத்தி முறைகள், நோய் தடுப்பு முறைகள், போன்றவைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை அலுவலர்கள் ஸ்ரீகிருபா, கள உதவியாளர் துரைமுருகன், எம்.ஜி.வி. மேகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.