மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
முதுகுளத்தூர் அருகே கடமங்குளத்தில் அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ராமபாண்டியன், கிராம தலைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை நிர்வாகி பாலமுருகன் வரவேற்றார். ஆசிரியைகள் மேனகா, சூரியபிரபா ஆகியோரின் சேவையை பாராட்டி அறக்கட்டளை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் 10ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. திட்ட அலுவலர் துரைப்பாண்டியன், கணபதி பொறியியல் கல்லூரி முதல்வர் சி.காதர்மைதீன், முன்னாள் தொடக்கக் கல்வி அலுவலர் பால்ச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார். விழாவுக்கான ஏற்பாடுகளை தொண்டு நிறுவன நிர்வாகிகள் முருகவேல், சம்பத்குமார், முத்துப்பாண்டியன் செய்திருந்தனர்.விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.’