புதிய தமிழ்தாய் வாழ்த்து !!
புதிய தமிழ்தாய் வாழ்த்து !!
எழுச்சிப்பாவலர் – விழுப்புரம் ஷாஜி
செந்தமிழே ! செம்மொழியே !
உந்தனையே பாட வந்தோம் !
செந்தேனே ! சந்தனமே ! சேர்ந்து
உன்னை வாழ்த்த வந்தோம் !
வள்ளுவனின் திருக்குறளில்
முப்பாலாய் நீ இருக்க …!
புறப்பாட்டு – அகப்பாட்டிலும்
சர்க்கரையாய் இனித்திருக்க …!
எட்டுத்தொகை – பத்துப்பாட்டு
பதிணென் கீழ்க் கணக்கு …!
ஒளவை தந்த ஆத்திச்சூடி
நீதி நூல்கள் உந்தனுக்கு …!
இளங்கோவின் சிலம்பினில் நீ
ஆடுகிறாய் இளந்தமிழே …!
கம்பனது காப்பியத்தில்
களிநடனம் உன் சிறப்பே …!
பாரதியும் – பாவேந்தனும்
பைந்தமிழ் உன் குமரர்களோ …!
தமிழ்த்தேர் உன் சாரதியாய்
எம்மையுமே ஏற்றிடுக ..!
யுக – யுகமாய் வாழ்ந்து வரும்
எழில்மிகுந்த தமிழ் தாயே …!
எக்காலமும் நீ வாழ
எல்லோரும் வாழ்த்துகிறோம் …!
வாழ்த்துகிறோம் …! வாழ்த்துகிறோம் ..!
( குவைத் நீதியின் குரல் – ஜுன் 2009 )