மனவளர்ச்சி குன்றிய மகனை காப்பாற்ற உதவுமாறு ஆட்சியரிடம் தாய் கோரிக்கை
மனவளர்ச்சி குன்றிய மகனை காப்பாற்றிட உதவுமாறு அவரது தாய் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமாரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தில் வசிக்கும் தோமா ஏசடியான் மனைவி மேரிஜூலியட்.
இவர்களது மகன் கிர்லோஷ் குமார் (7) பிறவியிலேயே மனவளர்ச்சி குன்றிய இவரால் இவரது தந்தை, அவரது மனைவியை விட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டாராம். இந்த நிலையில் ஆட்சியர் க. நந்தகுமாரிடம் மேரிஜூலியட் திங்கள்கிழமை கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:
சேர்ந்து வாழ்வதாக இருந்தால் மகனை கொலை செய்து விட்டு வந்தால் மட்டுமே சேர்ந்து வாழ்வேன் எனக் கூறி கணவர் பிரிந்து சென்றதால் கடந்த 2 ஆண்டுகளாக என் மகனை காப்பாற்ற முடியவில்லை. 90 சதவிகிதம் உடல் ஊனமுடைய என் மகனைக் காப்பாற்ற உதவித் தொகை வழங்குமாறு கடந்த இரு ஆண்டுகளாக கோரிக்கை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை என அந்த மனுவில் கூறி இருந்தார்.