மதுக்கடை ஊழியரை தாக்கியவர் கைது

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே உள்ள தேரிருவேலியில் மதுக்கடை ஊழியரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கருமல் கிராமத்தைச் சேர்ந்தவர்
ஜெயக்குமார் (40). மண்டபத்திலுள்ள மதுக்கடையில் பணிபுரிந்து வருகிறார். செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்து ஊருக்குச் செல்ல தேரிவேலி பேருந்து நிலையம்அருகே ஜெயக்குமார் நின்றிருந்தார்.
அப்போது மேலப் பச்சேரியைச் சேர்ந்த முருகவேல் (40) ஜெயக்குமாரிடம் பணம் கேட்டு தகராறு செய்தாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கட்டையால் ஜெயக்குமாரை முருகவேல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயம் அடைந்த ஜெயக்குமார் தேரிருவேலி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து முருகவேலை கைது செய்தனர். காயம் அடைந்த ஜெயக்குமார் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News

Read Previous

ஆபத்தான மின்கம்பத்தை மாற்றக் கோரிக்கை

Read Next

இந்த ஷேர் ஆட்டோவை மிஸ் பண்ணாதீங்க….

Leave a Reply

Your email address will not be published.