மணல் கடத்தல்: ஒருவர் கைது
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பகுதியில் அடிக்கடி மணல் திருடப்படுவதாக, எஸ்.ஐ., சபரிநாதனுக்கு புகார் வந்தது. இதையடுத்து, நேற்று, அப்பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தார்.
மணல் அள்ளியதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. மேலும், எஸ்.ஐ., யை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், ஆப்பனூரை சேர்ந்த முத்துராமலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.