இதம்பாடல் ஊராட்சியில் இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் விழா
சாயல்குடி:சிக்கல் அருகே இதம்பாடல் ஊராட்சியில் அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் விழா நடந்தது. பரமக்குடி ஆர்.டி.ஓ., குணாளன் வரவேற்றார். முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சுந்தரபாண்டியன், கடலாடி ஒன்றிய குழு தலைவர் மூக்கையா, ஊராட்சி தலைவர் ஜபாகிர் பேகம் பேசினர். பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்பட்டது.
ஒன்றிய செயலாளர்கள் தர்மர்(முதுகுளத்தூர்), அந்தோணிராஜ்(சாயல்குடி), வி.ஏ. ஓ., நாகனாதன் பங்கேற்றனர். கடலாடி தாசில்தார் அமிர்தம் நன்றி கூறினார்.
பின், கடலாடி ஒன்றிய அ.தி.மு.க., இளைஞரணி செயலாளர் சத்தியமூர்த்தி வீட்டு திறப்பு விழா நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., முருகன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சுந்தரபாண்டியன், ஒன்றிய குழு தலைவர் மூக்கையா பங்கேற்றனர்.