மட்டியரேந்தலில் “அம்மா’ திட்ட முகாம்
முதுகுளத்தூர் தாலுகா பொன்னக்கனேரி ஊராட்சி ஒன்றியம் மட்டியரேந்தலில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பொன்னக்கனேரி ஒன்றியம் மட்டியரேந்தலில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமில் குடும்ப அட்டை வழங்குதல், பட்டாமாறுதல், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், வீட்டுமனை பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை என 30 மனுக்கள் பெறப்பட்டன. முகாமுக்கு தாசில்தார் மோகன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் லீலாவதி, மண்டல துணை வட்டாட்சியர் ஸ்ரோன்மணி, வட்ட வழங்கல் அலுவலர் கல்யாணகுமார், வருவாய் அலுவலர் முருகராஜ், கிராம நிர்வாக அலுவலர் இளமதி, ஊராட்சித் தலைவி சூசையம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.