மக்கள் நலக் கூட்டணி ஊழியர் கூட்டம்

Vinkmag ad

முதுகுளத்தூரில் மக்கள் நல கூட்டணி கட்சிகளின் ஊழியர் கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது.

 இக்கூட்டத்திற்கு  இந்திய கமயூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலர் சி.பார்த்திபன் தலைமை வகித்தார். மதிமுக ஒன்றிய செயலர் எம்.எஸ்.சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலர் வி.முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலர் எம்.பாலகிருஷ்ணன், மதிமுக நகரச் செயலர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில், முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில்  மக்கள் நல கூட்டணி கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் வேப்பாளருக்கு தங்களது ஆதரவு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் ஜன. 26 ந்தேதி மதுரையில் நடைபெற இருக்கும் மக்கள் நலக் கூட்டணியின் தென் மண்டல பொதுக்கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News

Read Previous

முதுகுளத்தூர் அருகே மணல் திருட்டு: 3 பேர் கைது

Read Next

தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கிய நூல்களுக்குப் பொதுக்கள உரிம அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *