பூட்டிய வீட்டில் ரூ. 1 லட்சம், 2 பவுன் நகை திருட்டு

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே பூட்டிய வீட்டில் பீரோவை உடைத்து ஒரு லட்சம் பணம் மற்றும் 2 பவுன் நகை திருடப்பட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

தேவர்குறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி பஞ்சவர்ணம்(35). இவர் செவ்வாய்க்கிழமை  பகலில் வீட்டை பூட்டி சாவியை ஜன்னலில் வைத்து விட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

மீண்டும் வீடு திரும்பிய போது வீடு திறக்கப்பட்டு, உள்ளே இருந்த பீரோவை உடைத்து ரூ. ஒரு லட்சம் பணம் மற்றும் 2 பவுன் தங்க நகையும் திருடு போயிருந்ததாம்.

இதுகுறித்து இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News

Read Previous

துபை ஹோர் அல் அன்ஸ் பகுதியில் வீடு வாடகைக்கு

Read Next

இந்தியப் பிரதமரின் டுவிட்டர் முகவரி மாற்றம்

Leave a Reply

Your email address will not be published.