புரவி எடுப்பு திருவிழா
முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் அருகேயுள்ள கண்டிலானில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
முதுகுளத்தூர் அருகேயுள்ள கண்டிலான் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் வருடாபிஷேக விழா மற்றும் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு வருடாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு அபி ஷேகம், ஆராதனை உள் ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் அய்யனாருக்கு ஏராளமான பக்தர்கள் புரவி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.