மரபுக் கவிதைக்கான சிறப்புப் போட்டி

Vinkmag ad
kavithaippottiகவிதைச் சங்கமத்தின் மரபுக் கவிதைக்கான சிறப்புப் போட்டி – 14/07/2014 முதல் 20/07/2014 முடிய – தலைப்பு : ”பசுமை உலகில் படர்”
கவிதைச் சங்கமத்தின் மரபுக் கவிதைக்கான சிறப்புப் போட்டி – 14/07/2014 முதல் 20/07/2014 முடிய –

தலைப்பு : ”பசுமை உலகில் படர்”

பிற மொழிக் கலப்பில்லாத தமிழ் மரபுக் கவிதைகள் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.

ஒருவரே எத்தனை வகைப் பாக்களும் எழுதலாம்

ஒவ்வொரு வகைப்பாவின் அடியிலும் அந்தப் பாவகையின் இலக்கணக் குறிப்பு அல்லது வாய்பாடு எழுதுக.

ஒருவரே எத்தனை வகைப் பாக்களும் எழுதலாம்
முன்னர் வெளியிடப்பட்டதாகவோ, அல்லது சொந்த வலைத்தளம் உட்பட வேறெந்த வலைத்தளத்திலும் முன்னர் பதிவு செய்யப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.

கொடுத்த தலைப்பைப் பற்றி மட்டுமே 16 வரிகளுக்கு மிகாமல் பதிய வேண்டும். வரி வரம்பு: 16

உலகின் சிறந்த கவிமாமணி தலைமையில் உள்ள தமிழறிஞர்களின் குழுமத்தினரின் நடுவர் குழுவிடம் உங்களின் கவிதைகள் ஒப்படைக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படும்; எனவே, நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது; இதில் குறை காணுதலுக்கு இடம் இல்லை.

மறந்துபட்ட மரபின் வழிநின்று யாப்புக் கவிதைகள் யாத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இப்போட்டியை அறிவிக்கின்றோம்.

குறிப்பிட்ட சமூகத்தையோ, சாதி, சமூக அமைப்புகளையோ, தனி நபரையோ, நிறுவனங்களையோ விமர்சித்து எழுதும் பதிவுகள் நிராகரிக்கப்படும்.

ஆபாசம் கலந்த பதிவுகளும் படங்களும் வன்முறையைத் தூண்டும் பதிவுகளும் எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்படும்.

கவிதைகளை இங்கு வழக்கம் போல் பதியுங்கள், நிர்வாகிகளின் தீர்ப்பே இறுதியானது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஒரு கவிதைக்கு/கவிஞருக்கு ரூபாய் 1000/- சன்மானமும், கவிதைச் சங்கமத்தில் சிறப்புப் பட்டமும் வழங்கப்படும்.

News

Read Previous

புரவி எடுப்பு திருவிழா

Read Next

ஜுலை 18, துபாயில் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் இறுதி நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *