ஓராண்டாக கிடப்பில் சாலை சீரமைக்கும் பணி

Vinkmag ad

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகே சாலை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டு, ஓராண்டாக கிடப்பில் உள்ளதால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
முதுகுளத்தூரில் இருந்து 4 கிமீ தொலைவில் மேலமாநாங்கரை கிராமம் உள்ளது. இந்த வழித்தடத்தில் கடமங்குளம், மரவட்டி, முள்ளப்பன்கோட்டை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராம சாலையை ரூ.68 லட்சத்தில் தார்ச்சாலையாக மாற்றும் பணி கடந்த ஆண்டு துவங்கியது. இதற்காக சாலை தோண்டப்பட்டது. பின்னர் பணிகள் ஏதும் நடைபெறவில்லை.
சாலை தோண்டப் பட்டு குண்டும், குழியுமாக உளளதால் இந்த வழித்தடத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலமாநாங்கரை கிராமத்தை சேர்ந்த முருகன் கூறுகையில், “ஓராண்டாக இந்த சாலை பணி கிடப்பில் உள்ளது. இதனால் டூவீலர் உள் ளிட்ட வாகனங்களில் செல்ல முடியவில்லை. மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.

உடனடியாக இந்த சாலையை சரி செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றனர்.

News

Read Previous

மேலச்சீத்தை-முதுகுளத்தூர் சாலையை மேம்படுத்தித் தரக் கோரிக்கை

Read Next

புரவி எடுப்பு திருவிழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *